Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதிby rammalar
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar
» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar
» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar
» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar
» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar
» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar
» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar
» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar
» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar
» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar
ஈதுனக்கு அழகாமோ?
ஈதுனக்கு அழகாமோ?
போதுமே எங்கள் பொன்தமிழ்க் குலத்தர்
பட்டதோர் துயர்களும் இங்கே!
நீதமே இல்லை நீயுமே காக்கும்
நீண்டதோர் பொறுமையே சொன்னேன்!
ஏதமே நாங்கள் ஏதிவண் புரிந்தோம்?
எடுத்துநீ புகலுதல் வேண்டும்!
வேதமே கேட்டுன் செவிகளுக் கெங்கள்
வேதனை மொழிபுரிந் திலையோ?
கல்லினில் வடித்துக் கோவிலில் வைத்தக்
கணக்கதும் பிழையென வாச்சோ?
கல்லினில் வடித்தும் கடவுளாய்க் கண்ட
காட்சியும் பொருளிலா தாச்சோ?
கல்லென வேநீ கண்திற வாமற்
கிடப்பதே முடிவென வானால்
கல்லறை தனக்கும் கோவிலுக் கும்பின்
வேற்றுமை ஏதுள திங்கே?
அஞ்சலென் றுரைக்கும் அன்புடைக் கரங்கள்
அசைவினை இழந்ததும் ஏனோ?
சஞ்சல மென்றுன் சந்நிதி வந்தோம்
சாந்திநீ தரமறுப் பாயோ?
தஞ்சமென் றுன்றன் தாள்பணிந் திட்டோம்
தெய்வமே கண்திற வாயோ?
வஞ்சமில் லாரை வாட்டியே பார்த்தல்
வேதனே ஒருவிளை யாட்டோ?
நம்பினார்க் கெடுவ தில்லையென் றுரைத்த
நான்மறை நீர்த்ததோ இன்று?
வெம்பினார் நெஞ்சம் தெம்பினாற் சிரிக்க
விழியினாற் காண்பதும் என்று?
அம்பினாற் கொய்த ஐயிரு தலையன்
மீட்டுமே பிறந்துளான் இங்கே!
நம்பியாய் வந்த நாயகா உன்றன்
நல்லவ தாரமும் எங்கே?
வேண்டாம்,
"தர்மமே யழிந்து தரணியின் மீதில்
அதர்மமே ஓங்கிடும் போது
கர்மமே முடிக்க கனிவுடன் அந்நாள்
கல்கியென் றுதிப்பனே, முற்றாய்ச்
சர்வமே துடைத்துச் சதுரிடு வேனஃ
தே,கலி யுகமுடி வென்னும்
மர்மமே" யென்றாய் மாலவா அச்சொல்
மெய்யென வாகிலும் நன்றே!
தரிகிட தத்தோம் தரிகிட தத்தோம்
தரிகிட தரிகிட வென்றே
கருகிட ஞாலம் கலங்கிடக் கோலம்
கண்ணனே தரித்துநீ, தீயோர்
நெறிகெட, ரத்தம் பருகிட, நல்லோர்
உருகிட, உருவெடுத் தே,வா!
தரிகிட தத்தோம் தரிகிட தத்தோம்
தரிகிட தரிகிட தத்"ஓம்"!
---------ரௌத்திரன்
பட்டதோர் துயர்களும் இங்கே!
நீதமே இல்லை நீயுமே காக்கும்
நீண்டதோர் பொறுமையே சொன்னேன்!
ஏதமே நாங்கள் ஏதிவண் புரிந்தோம்?
எடுத்துநீ புகலுதல் வேண்டும்!
வேதமே கேட்டுன் செவிகளுக் கெங்கள்
வேதனை மொழிபுரிந் திலையோ?
கல்லினில் வடித்துக் கோவிலில் வைத்தக்
கணக்கதும் பிழையென வாச்சோ?
கல்லினில் வடித்தும் கடவுளாய்க் கண்ட
காட்சியும் பொருளிலா தாச்சோ?
கல்லென வேநீ கண்திற வாமற்
கிடப்பதே முடிவென வானால்
கல்லறை தனக்கும் கோவிலுக் கும்பின்
வேற்றுமை ஏதுள திங்கே?
அஞ்சலென் றுரைக்கும் அன்புடைக் கரங்கள்
அசைவினை இழந்ததும் ஏனோ?
சஞ்சல மென்றுன் சந்நிதி வந்தோம்
சாந்திநீ தரமறுப் பாயோ?
தஞ்சமென் றுன்றன் தாள்பணிந் திட்டோம்
தெய்வமே கண்திற வாயோ?
வஞ்சமில் லாரை வாட்டியே பார்த்தல்
வேதனே ஒருவிளை யாட்டோ?
நம்பினார்க் கெடுவ தில்லையென் றுரைத்த
நான்மறை நீர்த்ததோ இன்று?
வெம்பினார் நெஞ்சம் தெம்பினாற் சிரிக்க
விழியினாற் காண்பதும் என்று?
அம்பினாற் கொய்த ஐயிரு தலையன்
மீட்டுமே பிறந்துளான் இங்கே!
நம்பியாய் வந்த நாயகா உன்றன்
நல்லவ தாரமும் எங்கே?
வேண்டாம்,
"தர்மமே யழிந்து தரணியின் மீதில்
அதர்மமே ஓங்கிடும் போது
கர்மமே முடிக்க கனிவுடன் அந்நாள்
கல்கியென் றுதிப்பனே, முற்றாய்ச்
சர்வமே துடைத்துச் சதுரிடு வேனஃ
தே,கலி யுகமுடி வென்னும்
மர்மமே" யென்றாய் மாலவா அச்சொல்
மெய்யென வாகிலும் நன்றே!
தரிகிட தத்தோம் தரிகிட தத்தோம்
தரிகிட தரிகிட வென்றே
கருகிட ஞாலம் கலங்கிடக் கோலம்
கண்ணனே தரித்துநீ, தீயோர்
நெறிகெட, ரத்தம் பருகிட, நல்லோர்
உருகிட, உருவெடுத் தே,வா!
தரிகிட தத்தோம் தரிகிட தத்தோம்
தரிகிட தரிகிட தத்"ஓம்"!
---------ரௌத்திரன்
Re: ஈதுனக்கு அழகாமோ?
எதிர்காலத்தில் உங்கள் கவிதைகள் தேசிய உடமை ஆகலாம் கவிஞரே !இது மிகை வாரத்தை
அல்ல!





thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: ஈதுனக்கு அழகாமோ?
எந்த வார்த்தைகளை எடுத்து எழுதி கவிதையை பாராட்ட? வாழ்த்துக்கள் கவிஞரே!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum